sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

உதவித்தொகை குறித்த அறிவிப்பு; கைத்தறி நெசவாளர்கள் குழப்பம்

/

உதவித்தொகை குறித்த அறிவிப்பு; கைத்தறி நெசவாளர்கள் குழப்பம்

உதவித்தொகை குறித்த அறிவிப்பு; கைத்தறி நெசவாளர்கள் குழப்பம்

உதவித்தொகை குறித்த அறிவிப்பு; கைத்தறி நெசவாளர்கள் குழப்பம்


ADDED : ஜூலை 10, 2024 10:18 PM

Google News

ADDED : ஜூலை 10, 2024 10:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக அரசு அறிவித்த, உதவித்தொகை குறித்த சட்டசபை அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என, கைத்தறி நெசவாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கைத்தறி நெசவு தொழில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், உதவித்தொகை குறித்து, சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குழப்பம் ஏற்படுத்துவதாக நெசவாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து, கோவை மண்டல கைத்தறி நெசவாளர் (பாரதீய மஸ்துார்) சங்கத்தின் செயலாளர் நடராஜ் கூறியதாவது:

கைத்தறி நெசவாளர் இயற்கை மரணமடைந்தால், ஈமச்சடங்குக்காக, 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணை உள்ளது. இது, 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே, இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கைத்தறி துணி நுால்த்துறை இணையதளத்தில் நலவாரியத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே, இந்த உதவித்தொகை வழங்கப்படும் என உள்ளது. எனவே, தமிழக அரசு அறிவித்த ஈமச்சடங்கு உதவித்தொகை நல வாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கா அல்லது கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us