sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர்  சங்கம் கோரிக்கை

/

பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர்  சங்கம் கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர்  சங்கம் கோரிக்கை

பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர்  சங்கம் கோரிக்கை


ADDED : ஜூன் 26, 2024 02:13 AM

Google News

ADDED : ஜூன் 26, 2024 02:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள், பதவி ஏற்றுக் கொண்டனர்.

கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு மண்டபத்தில், தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் சார்பில், மாநில பொதுக்குழு கூட்டம், நிர்வாகிகள் பணி நிறைவு பாராட்டு விழா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு பதிலாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். அனைத்து காலி பணியிடங்களையும் நிறப்ப வேண்டும்.

அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில் வரி ரத்து செய்ய வேண்டும். அமைச்சு பணியாளர்களுக்கு முறையாக கலந்தாய்வு நடத்தி பணி மாறுதல் வழங்க வேண்டும். குறித்த காலத்தில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

பணியின் போது மரணமடையும் அரசு அலுவலர்களுக்கு, ரூ.10 லட்சம் கருணை தொகை வழங்க வேண்டும். பொங்கல் போனஸ் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேணடும்.

இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள்

பதவியேற்புவிழாவில் சங்கத்தின் புதிய மாநில தலைவராக தேசிங்குராஜன், மாநில பொது செயலாளராக முத்து ரமேஷ், மாநில பொருளாளராக பார்த்தசாரதி உட்பட, 28 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்று கொண்டனர்.








      Dinamalar
      Follow us