sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஐ.எப்.ஜி.டி.பி., சார்பில் ஓசோன் தினம் அனுசரிப்பு

/

ஐ.எப்.ஜி.டி.பி., சார்பில் ஓசோன் தினம் அனுசரிப்பு

ஐ.எப்.ஜி.டி.பி., சார்பில் ஓசோன் தினம் அனுசரிப்பு

ஐ.எப்.ஜி.டி.பி., சார்பில் ஓசோன் தினம் அனுசரிப்பு


ADDED : செப் 17, 2024 05:37 AM

Google News

ADDED : செப் 17, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: இந்திய வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம் (இ.ஐ.ஏ.பி.சி.,) சார்பில், சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் முறை (லைப்) திட்டம் மற்றும் 'தாயின் பெயரில் ஒரு மரம்' ஆகியவற்றின் ஒரு பகுதியாக, உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, மேட்டுப்பாளையம், வெல்ஸ்புரம் அரசு ஆதி திராவிடர் மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்றுகள் நடப்பட்டன. சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மைய முதுநிலை திட்ட அலுவலர் விக்னேஷ்வரன், சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்களை, ஓசோன் படலம் எவ்வாறு வடிகட்டி, புவியைப் பாதுகாக்கிறது என விளக்கினார். மேலும், மனித செயல்பாடுகளால் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டை, அதைப்பாதுகாப்பதற்கான மான்ட்ரீல் நெறிமுறை நடப்பாண்டில் மையக்கருவாக இருப்பது உள்ளிட்டவை குறித்தும் விளக்கினார்.

பஞ்சபூதங்களின் முக்கியத்துவம், உயிர்களுக்கு அவற்றின் இன்றியமையாமை குறித்து, பள்ளி மாணவர்கள் கருத்தைப் பகிர்ந்தனர். தகவல் அலுவலர் வாமதேவன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us