/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதுக்கடை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு
/
மதுக்கடை திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு
ADDED : ஆக 06, 2024 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: எல்.ஐ.சி., காலனி அருகே டாஸ்மாக் பார் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
கந்தராபுரம் அடுத்து எல்.ஐ.சி., காலனி அருகே குறிச்சிபுதூர் உள்ளது. வீடுகள், தொழிற்சாலைகள் உள்ள இப்பகுதியில் டாஸ்மாக் பார் அமைக்க, பணி நடக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் அமைச்சர் மகேஷிடம், மனு கொடுத்தனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனிலும் மனு கொடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பொள்ளாச்சி சாலையிலிருந்து இப்பகுதிக்கு செல்லும் சாலையின் துவக்கம் மற்றும் உட் பகுதியில், நான்கு இடங்களிலும் மக்கள் பிளக்ஸ் பேனர் வைத்தனர்.