sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனையில் போலீசார் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது: டீன்

/

அரசு மருத்துவமனையில் போலீசார் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது: டீன்

அரசு மருத்துவமனையில் போலீசார் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது: டீன்

அரசு மருத்துவமனையில் போலீசார் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது: டீன்


ADDED : ஆக 25, 2024 10:26 PM

Google News

ADDED : ஆக 25, 2024 10:26 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில், போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளதாக, டீன் நிர்மலா தெரிவித்தார்,

நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த, 14ம் தேதி பயிற்சி டாக்டரிடம் அத்துமீற முயன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி மருத்துவர்கள் கழிப்பிடம், அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்தனர். அதை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மருத்துவமனை வளாகத்தில், 250 சி.சி.டி.வி.,கேமராக்கள் உள்ளன. வேலை செய்யாத கேமராக்களை சரி செய்யும் பணி, நடைபெற்று வருகிறது.

விளக்குகள் வசதியும், முழுமையாக சரிசெய்யப்பட்டுள்ளது. கழிப்பிட வசதி இல்லை என்று தவறான செய்தி பரப்பி வருகின்றனர். 5, 6 இடங்களில் கழிப்பிடம் தயார் செய்யப்பட்டுள்ளது. பழைய கட்டடம் என்பதால், இங்கு ஒரு சில குறைபாடுகள் உள்ளன. அதை சரி செய்து வருகிறோம்.

மருத்துவமனை வளாகத்தில் சாலை, பாதாள சாக்கடை இணைப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இந்த பணிகள் முடிந்தால், விரைவில் தீர்வு கிடைக்கும். வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்துவதால், நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதை தவிர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. நோயாளிகளை பார்வையிட, 4:00 முதல், 6:00 மணி வரை தான் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. நோயாளிகள் உடன், 2 பேர் தான் தங்கியிருக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய, போலீஸ் கமிஷனரிடம் கோரிக்கை வைத்தோம். இதனால், போலீசார் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, டீன் நிர்மலா தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us