sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதியில் அதிருப்தி

/

அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதியில் அதிருப்தி

அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதியில் அதிருப்தி

அறிவிப்பின்றி மின் வெட்டு; மலைப்பகுதியில் அதிருப்தி


ADDED : ஜூலை 24, 2024 08:36 PM

Google News

ADDED : ஜூலை 24, 2024 08:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறையில் மழை தொடர்ந்து பெய்யும் நிலையில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு, அய்யர்பாடி துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மாதத்தில் ஒரு நாள் மின்தடையும் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு மேலாக எவ்வித முன் அறிவிப்பும் இன்றி அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது.

மக்கள் கூறியதாவது:

வால்பாறையில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. எஸ்டேட் பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், பகல், இரவு நேரங்களில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வனவிலங்குகள் அதிகம் உள்ள நிலையில், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால், இரவு நேரங்களில் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நடந்து செல்லும் போது, வனவிலங்குகள் நடமாட்டத்தால் அச்சத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us