sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநில அளவிலான கூடைப்பந்து 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி.,

/

மாநில அளவிலான கூடைப்பந்து 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி.,

மாநில அளவிலான கூடைப்பந்து 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி.,

மாநில அளவிலான கூடைப்பந்து 'டிராபி'யை வென்றது பி.எஸ்.ஜி.,


ADDED : மார் 04, 2025 06:23 AM

Google News

ADDED : மார் 04, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணி முதல் பரிசை தட்டியது.

பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரியில், 49வது மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான 'பி.எஸ்.ஜி., டிராபி' கூடைப்பந்து போட்டி, இரு நாட்கள் நடந்தது. ஆண்களுக்கான இப்போட்டியில், மாநிலத்தில் உள்ள 'டாப்' எட்டு அணிகள் பங்கேற்றன.

'லீக்' முறையிலான போட்டிகளின் நிறைவில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி, முதல் பரிசை தட்டியது. இரண்டாம் பரிசை, சென்னை டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி அணியும், மூன்றாம் பரிசை திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி அணியும், நான்காம் பரிசை திருச்சி புனித ஜோசப் கல்லுாரி அணியும் வென்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோவை மாவட்ட கூடைப்பந்து சங்க துணை தலைவர் அசோக், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி செயலாளர் கண்ணய்யன், முதல்வர்(பொ) செங்குட்டுவன் ஆகியோர் வழங்கினர்.






      Dinamalar
      Follow us