/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதரவின்றி ரோட்டில் விடப்படும் நாய் குட்டிகள் உணவின்றி இறப்பு; பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கலாமே!
/
ஆதரவின்றி ரோட்டில் விடப்படும் நாய் குட்டிகள் உணவின்றி இறப்பு; பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கலாமே!
ஆதரவின்றி ரோட்டில் விடப்படும் நாய் குட்டிகள் உணவின்றி இறப்பு; பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கலாமே!
ஆதரவின்றி ரோட்டில் விடப்படும் நாய் குட்டிகள் உணவின்றி இறப்பு; பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கலாமே!
ADDED : பிப் 23, 2025 11:52 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு பகுதியில் ரோட்டோரத்தில், ஆதரவின்றி நாய் குட்டிகளை வாகன ஓட்டுநர்கள் விட்டுச்செல்கின்றனர்.
கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதியில், செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதில், பூனை, பறவை வகைகளை காட்டிலும், அதிகப்படியானோர் நாய் வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர். விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் தோட்டங்களில் நாய் வளர்க்கின்றனர்.
இதன் வாயிலாக, அவர்களுக்கு மன மகிழ்ச்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படுகிறது. நாய்களும் சிறந்த முறையில் வளர்கிறது. இந்நிலையில்,பெரும்பாலான மக்கள் செல்லப்பிராணிகளான நாயை பராமரிக்க முடியாமலும், பிறந்த குட்டிகளை இறக்கம் இன்றியும், மயானம் மற்றும் ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதிகளில் விட்டுச்செல்கின்றனர்.
இதனால், அவைகளுக்கு சரியான உணவு கிடைக்காமலும், ரோட்டில் செல்லும் போது வாகனத்தில் அடிபட்டும் இறக்க நேரிடுகின்றன. இதைக்காணும் பொதுமக்கள் பரிதாப்படுகின்றனர். இதை தடுக்கவும், பராமரிக்கவும், அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கிணத்துக்கடவு மயானம் வழியாக செல்லும் நபர்கள், நாய் குட்டிகளை ரோட்டில் விட்டு செல்கின்றனர். கடந்த இரண்டு மாதத்தில், இங்கு 5 சிறிய நாய் உட்பட 7 நாய்கள் ஆதரவின்றி விடப்பட்டுள்ளன.
இதில், மூன்று நாய்கள் உணவு இல்லாமல் இறந்துள்ளன. மீதம் உள்ள நாய்களுக்கு இப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் உணவளித்து வருகின்றனர்.
நாய் வளர்க்கக் கூடிய பிராணி ஆகும். இவைகளை பராமரிக்க முடியாவிட்டால், பராமரிப்பு மையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு மாறாக ரோட்டில் விட்டுச்செல்கின்றனர். இது போன்ற செயல்களை தடுக்க, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
இது போல் பல்வேறு பகுதிகளில் ஆதரவின்றி சுற்றித்திரியும் நாய்களை காப்பாற்றி, பராமரிக்க அரசும் கவனம் செலுத்த வேண்டும்.