sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொது ஒதுக்கீட்டு இடத்தில் அறிவிப்பு பலகை  அகற்றம்

/

பொது ஒதுக்கீட்டு இடத்தில் அறிவிப்பு பலகை  அகற்றம்

பொது ஒதுக்கீட்டு இடத்தில் அறிவிப்பு பலகை  அகற்றம்

பொது ஒதுக்கீட்டு இடத்தில் அறிவிப்பு பலகை  அகற்றம்


ADDED : மே 30, 2024 04:59 AM

Google News

ADDED : மே 30, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : ராமநாதபுரம் அருகே கொங்கு நகரில், 14 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் வைக்கப்பட்ட மாநகராட்சி அறிவிப்பு பலகையை, மர்ம நபர்கள் அகற்றியுள்ளனர்.

மாநகராட்சி மத்திய மண்டலம், 62வது வார்டு ராமநாதபுரம் அருகே கொங்கு நகரில், 1972ம் ஆண்டு கோவை நகராட்சியாக இருந்தபோது, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ஒன்றுக்கு, 8.49 ஏக்கர் இடத்தில், 84 மனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

பொது பயன்பாட்டிற்கென, 70 சென்ட் மற்றும், 14 சென்ட் இடம் என இரண்டு இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்தது.

நாளடைவில் அவை தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்த, 22ம் தேதி மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர், ஆக்கிரமிப்பை மீட்கும் நடவடிக்கையை துவங்கினர்.

இதில், 14 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் முழுமையாக மீட்கப்பட்டு, அந்த இடத்தில் மாநகராட்சி அறிவிப்பு பலகை நிறுவப்பட்டது. இந்நிலையில், இந்த 14 சென்ட் இடத்தில் இருந்த அறிவிப்பு பலகையை மர்ம நபர்கள் அகற்றியுள்ளனர்.

இடத்தை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், புலியகுளம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க உள்ளனர். இரண்டு பொது ஒதுக்கீட்டு இடங்களிலும், 'சிசிடிவி' கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும், முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us