/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேஸ்கோர்ஸில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
/
ரேஸ்கோர்ஸில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
ரேஸ்கோர்ஸில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
ரேஸ்கோர்ஸில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்; மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நடவடிக்கை
ADDED : பிப் 26, 2025 04:13 AM

கோவை; கோவை கே.ஜி.தியேட்டர் எதிரே சாலையோர பூங்காவை ஒட்டியுள்ள இடத்தை ஆக்கிரமித்து நடத்தப்பட்டு வந்த ஐந்து கடைகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று அகற்றினர்.
கோவை கே.ஜி.தியேட்டருக்கு எதிரே சாலையோர பூங்கா இருக்கிறது. அதன் ஒரு பகுதியில், 'டேன் டீ' விற்பனையகம் செயல்படுகிறது. அதன் அருகாமையில் உள்ள ரோட்டோரத்தை ஆக்கிரமித்து, வரிசையாக டீக்கடைகள், பெட்டிக்கடைகள் நடத்தப்பட்டு வந்தன.
அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல், சிரமம் ஏற்பட்டு வந்தது. இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடந்து வந்தன. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றச் சொல்லி, ரேஸ்கோர்ஸ் போலீஸ் தரப்பில் இருந்து, மாநகராட்சிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
நகரமைப்பு பிரிவினர், அப்பகுதியில் உள்ள ஐந்து கடைகளை நேற்று அகற்றினர். ஆவின் பெயரில் செயல்படும் டீக்கடை, அனுமதி பெற்றிருப்பதாக தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க, நகரமைப்பு பிரிவினர் கோரியுள்ளனர். சாலையோர பூங்காவின் சுற்றுச்சுவரை இடித்து விட்டு, மரங்களை வெட்டாமல், அப்பகுதியை சமதளமாக்கி, 'ஹாலோ பிளாக்' கற்களை பதித்து, 'பார்க்கிங்' பகுதி ஏற்படுத்திக் கொடுக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஏழு ஏக்கர் இடமிருக்கிறது. அதில், இரண்டு ஏக்கரை வாகனங்கள் நிறுத்த ஒதுக்கிக் கொடுக்க, கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளோம். கே.ஜி., மருத்துவமனை எதிரே உள்ள பூங்கா இடத்தில் வாகனங்கள் நிறுத்தலாம்.
இதேபோல், வாகனங்கள் நிறுத்த ரேஸ்கோர்ஸ் பகுதியில், மேலும் மூன்று இடங்கள் தேர்வு செய்திருக்கிறோம். 'ஹாலோ பிளாக்' கற்கள் பதிக்கப்படும். ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டச்சாலையை ஒட்டியுள்ள கடைகள், ரோட்டை ஆக்கிரமித்து, பூச்செடிகள் வைத்துள்ளன. சுற்றுப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் படிப்படியாக அகற்றப்படும். அவ்விடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும்,'' என்றார்.