sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கட்சி முகவர்களுக்கு ஓட்டலில் அறைகள்

/

கட்சி முகவர்களுக்கு ஓட்டலில் அறைகள்

கட்சி முகவர்களுக்கு ஓட்டலில் அறைகள்

கட்சி முகவர்களுக்கு ஓட்டலில் அறைகள்


ADDED : ஜூன் 03, 2024 11:19 PM

Google News

ADDED : ஜூன் 03, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்;ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் கட்சியினர், கோவையில் ஓட்டல் அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று நடக்கிறது. கோவை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணிக்கை அரசினர் பொறியியல் கல்லுாரியில் நடக்க உள்ளது.

கோவை தொகுதியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டசபை தொகுதி வருவதால், அங்கிருந்து கட்சியினர் காலையில் துவங்கும் ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்க வருவது சிரமம் என்பதால், முதல் நாளே கோவைக்கு சென்று தங்க கட்சி தலைமை ஏற்பாடுகள் செய்துள்ளன.

இதற்காக, தி.மு.க., அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., வினர் தங்கள் கட்சியினருக்கு, கோவையில் உள்ள ஓட்டல்களில் அறைகளை புக் செய்துள்ளனர்.

பல்லடம், சூலூர் சட்டசபை தொகுதியை சேர்ந்த ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்கும் முகவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேற்று மாலையே கோவை புறப்பட்டு சென்றனர். ஓட்டல் அறைகளில் தங்கியுள்ள அவர்கள், காலையில் ஓட்டு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ளனர்.






      Dinamalar
      Follow us