sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.1.97 கோடி காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனை

/

ரூ.1.97 கோடி காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனை

ரூ.1.97 கோடி காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனை

ரூ.1.97 கோடி காய்கறிகள் உழவர் சந்தையில் விற்பனை


ADDED : செப் 03, 2024 02:01 AM

Google News

ADDED : செப் 03, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், 1.97 கோடி ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.

பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான்பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், காய்கறி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும்; விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், நுகர்வோர்கள் சந்தையில் காய்கறி வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த மாதம், ஒரு கோடியே, 97 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.

உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில்,'உழவர் சந்தைக்கு கடந்த மாதம் நாளொன்றுக்கு, 6 லட்சத்து, 37 ஆயிரத்து, 166 ரூபாய் மதிப்புள்ள, 15 ஆயிரம் கிலோ காய்கறிகள் வந்தன. தினமும், சராசரியாக 65 விவசாயிகளும், 3,107 நுகர்வோர்களும் பங்கேற்றனர்.

கடந்த மாதம், 466.4 டன் காய்கறி வரத்து காணப்பட்டது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, ஒரு கோடியே, 97 லட்சத்து, 52 ஆயிரத்து, 160 ரூபாயாகும். மொத்தம், 2,016 விவசாயிகள், 93,543 நுகர்வோர்கள் பங்கேற்றனர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us