/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சார் - பதிவாளர் கணக்கில் ரூ.25.33 லட்சம் லஞ்சப் பணம்
/
சார் - பதிவாளர் கணக்கில் ரூ.25.33 லட்சம் லஞ்சப் பணம்
சார் - பதிவாளர் கணக்கில் ரூ.25.33 லட்சம் லஞ்சப் பணம்
சார் - பதிவாளர் கணக்கில் ரூ.25.33 லட்சம் லஞ்சப் பணம்
ADDED : ஆக 10, 2024 02:34 AM

மேட்டுப்பாளையம்:கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சார் - பதிவாளர் அலுவலகத்தில், சாந்தி, ராமமூர்த்தி சார் - பதிவாளர்களாக உள்ளனர். பத்திரப்பதிவு செய்வோரிடம், இவர்கள் லஞ்சம் பெறுவதாக, கோவை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி., திவ்யா தலைமையிலான குழுவினர், 8ம் தேதி மாலை 5:30 மணிக்கு, மேட்டுப்பாளையம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சோதனையை துவக்கினர்; பணியாளர்களிடம் விசாரித்தனர்.
விசாரணையில், பணியாளர்கள் நவீன்குமார், ராஜா, பத்திரப்பதிவு செய்ய வருவோரிடமிருந்து பணம் பெற்று, 'ஜிபே' வாயிலாக, சார் - பதிவாளர் சாந்தி வங்கிக் கணக்கிற்கும், அவரது உறவினர்கள் வங்கிக் கணக்கிற்கும் பணத்தை அனுப்பியது தெரிந்தது.
ஒரு மாதத்தில் மட்டும், சார் - பதிவாளர் மற்றும் உறவினர்கள் வங்கிக் கணக்கில், 25.33 லட்சம் ரூபாய் லஞ்சப் பணம், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையாக நடந்துள்ளது.
இரண்டாவது நாளாக நேற்று காலை துவங்கிய விசாரணை, மதியம் 3:00 மணி வரை நடைபெற்றது.