sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொத்துக்காக தந்தையை கம்பியால் தக்கிய மகன்கள்

/

சொத்துக்காக தந்தையை கம்பியால் தக்கிய மகன்கள்

சொத்துக்காக தந்தையை கம்பியால் தக்கிய மகன்கள்

சொத்துக்காக தந்தையை கம்பியால் தக்கிய மகன்கள்


ADDED : பிப் 15, 2025 07:27 AM

Google News

ADDED : பிப் 15, 2025 07:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; சொத்துக்களை தங்கள் பெயரில் எழுதி வைக்க வலியுறுத்தி, தந்தையை தாக்கிய மகன்கள் மற்றும் பேரன் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சரவணம்பட்டி, சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன், 73. இவருக்கு சிவானந்தபுரம் பகுதியில் சொந்தமாக 28 வீடுகள் உள்ளன. வீடுகளை வாடகைக்கு கொடுத்து, வசூல் செய்து வருகிறார்.

இந்நிலையில், நடராஜனின் மகன்களான ராஜா பிரபு மற்றும் செந்தில் பிரபு ஆகிய இருவரும் வீடுகளை, தங்கள் பெயரில் எழுதி வைக்குமாறு கேட்டு, நடராஜனிடம் அடிக்கடி பிரச்னை செய்து வந்தனர். நடராஜன் நடத்தி வரும், 'சிட் பண்ட்' நிறுவனத்தை கைவிட வேண்டும் எனவும் கோரினர்.

இந்நிலையில், கடந்த 13ம் தேதி நடராஜன், சிவானந்தபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது, ராஜா பிரபு, அவரின் மகன் பிரகதீஸ்வரன் மற்றும் செந்தில் பிரபு ஆகியோர், அங்கு வந்து நடராஜனிடம் தகராறு செய்தனர். தொடர்ந்து, ராஜா பிரபு இரும்பு கம்பியால் நடராஜனின் தலை, கால், கைகளில் கடுமையாக தாக்கினார். செந்தில் பிரபு, பிரகதீஸ்வரன் ஆகியோரும் தாக்கினர். அக்கம் பக்கத்தினர் நடராஜனை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நடராஜன் அளித்த புகாரின்படி, சரவணம்பட்டி போலீசார் ராஜா பிரபு, செந்தில் பிரபு மற்றும் பிரகதீஸ்வரன் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us