ADDED : ஜூன் 22, 2024 11:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே, ஒன்னிபாளையம் எல்லை கருப்பராயன் கோவிலில் பவுர்ணமி தினத்தையொட்டி, எல்லை கருப்பராயனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பனை விவசாயிகள் நலனுக்காக, பனை பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து, கருப்பராயன் கோவில் வளாகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பனை தொழிலாளர்கள் சார்பில் பனை மரத்தின் ஓலைகள் வாயிலாக செய்யப்பட்ட, கைவினை பொருட்களான அலங்கார கூடை, விசிறி, பை, உள்ளிட்டவை அரங்குகள் அமைத்து, காட்சிக்கு வைக்கப்பட்டது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள், கண்டு ரசித்தும், கைவினை பொருட்களை வாங்கியும் சென்றனர்.--