sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கணும் ஆசிரியர் கழகம் கோரிக்கை

/

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கணும் ஆசிரியர் கழகம் கோரிக்கை

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கணும் ஆசிரியர் கழகம் கோரிக்கை

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கணும் ஆசிரியர் கழகம் கோரிக்கை


ADDED : ஜூலை 14, 2024 11:04 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சனிக்கிழமை பள்ளி வேலை நாட்களாக, அறிவித்து இருக்கும் உத்தரவை திரும்ப பெறவேண்டும் என, தமிழக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த கல்வியாண்டில் உள்ள, 44 சனிக்கிழமைகளில் 20 சனிக்கிழமைகள் வேலை நாட்களாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து, ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருளானந்தம் கூறியதாவது:

தமிழகத்தை பொருத்தவரை, பள்ளிகளுக்கு 200 நாட்கள்தான் வேலை நாட்களாக இருப்பது வழக்கம். இந்த ஆண்டு 219 நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 சனிக்கிழமைகள் ஆசிரியர்கள் வேலைக்கு வரவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

சனிக்கிழமை பள்ளிகளை திறந்தால், 50 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை. இதனால் ஆசிரியர்களின் உழைப்பு வீணாகிறது. அனைத்து அரசு அலுவலகங்களும் சனிக்கிழமை விடுமுறையாக இருக்கும் போது, பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் ஏன் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். அதனால் 219 வேலை நாட்கள் என்பதை, 200 நாட்கள் என, அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us