/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அண்ணாமலை மீது அளித்த புகார் பொய்! புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
/
அண்ணாமலை மீது அளித்த புகார் பொய்! புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
அண்ணாமலை மீது அளித்த புகார் பொய்! புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
அண்ணாமலை மீது அளித்த புகார் பொய்! புகார்தாரர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 30, 2024 02:32 AM

கோவை;அண்ணாமலை மீது பொய் புகார் அளித்த நபர் மீது, நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோவை கலெக்டர் கிராந்தி குமார்உத்தரவிட்டுள்ளார்.வரும் லோக்சபா தேர் தலில், கோவை தொகுதியில், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார்.
ஆரத்தி எடுக்கும் ஒரு பெண்ணுக்கு, அண்ணாமலை பணம் கொடுப்பது போன்ற வீடியோவை,ஹரிஸ் என்பவர் 'எக்ஸ்' தளம் வாயிலாக, கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் கிராந்தி குமாரிடம், புகார் ஆக அளித்துள்ளார்.வீடியோவின் உண்மைத்தன்மையை விசாரிக்க, போலீசாருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதற்கிடையேஅண்ணாமலை தனது 'எக்ஸ்' தளத்தில், 'ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, கோவை மாவட்ட கலெக்டர், ராமநாதபுரம் மாவட்டத்தில்,2023 ஜூலை 29ம் தேதி 'என் மண்; என் மக்கள்' யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.
அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது, நமது தமிழக கலாசாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும், இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.
பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் ஓட்டுகளில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை என, தெளிவுபடுத்தியுள்ளோம்.
இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் ஓட்டுகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட கலெக்டர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று, நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்' என பதிவிட்டார்.
பொய் புகார் என நிரூபணம்
இச்சூழலில், போலீசார் நடத்திய விசாரணையில் அண்ணாமலை மீது அளித்த புகார் பொய்யானது என தெரியவந்தது.
பொய் புகார் அளித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு கோவை கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தனது 'எக்ஸ்' தளத்தில், 'ஆரத்தி எடுத்தவருக்கு அண்ணாமலை பணம் கொடுத்த வீடியோ, கடந்தாண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்டது. என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இது, தேர்தல் நடத்தை விதிமுறைக்குள் வராது. பொய்யான புகார் கொடுத்தவர் மீது, மேல் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வீடியோ குறித்து புகார் அளித்த ஹரிஸ் என்ற நபர், 'உறுதிப்படுத்தியதற்கு நன்றி. நான் அந்த வீடியோவை நீக்கிவிடுகிறேன். போலீசாரிடம் விளக்கம் அளிக்க தயாராக உள்ளேன்' என 'எக்ஸ்' தளத்தில் தெரிவித்துள்ளார்.

