sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 07, 2026 ,மார்கழி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூர் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி நான்கு ஆண்டுகளாக இழுபறி

/

பேரூர் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி நான்கு ஆண்டுகளாக இழுபறி

பேரூர் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி நான்கு ஆண்டுகளாக இழுபறி

பேரூர் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி நான்கு ஆண்டுகளாக இழுபறி


ADDED : ஏப் 23, 2024 10:32 PM

Google News

ADDED : ஏப் 23, 2024 10:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர் : பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றின் கரையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டு வரும் தர்ப்பண மண்டபம் கட்டுமான பணி, நான்கு ஆண்டுகளாக இழுபறியில் உள்ளது.

பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றின் கரையில், உயிரிழந்தவர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தால், அவர்கள் முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம்.

இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இங்கு முன்னோர்களுக்கு, திதி கொடுத்து செல்வது வழக்கம்.

இங்கு, வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாததால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

அதோடு, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, தர்ப்பண மண்டபத்திற்குள்ளும் வெள்ள நீர் புகும்.

இந்நிலையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில், பேரூர் படித்துறையில் உள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 2.75 ஏக்கர் இடத்தில், பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய தர்ப்பண மண்டபம் கட்டும் பணி, 2020ம் ஆண்டு பூமி பூஜையுடன் துவங்கியது.

ஆனால், 4 ஆண்டுகள் ஆகும் நிலையிலும், இன்னும் முடியவில்லை. விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

'90 சதவீத பணிகள் ஓவர்'


பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலா கூறுகையில், கொரோனா காரணமாக, கட்டுமான பொருட்கள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டு, காலதாமதம் ஏற்பட்டது. தற்போது, 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. வரும் ஜூன் மாதத்தில், தர்ப்பண மண்டபம் திறக்கப்படும்,என்றார்.

என்னென்ன வசதிகள்?

இங்கு கோவில் நிர்வாகம் சார்பில், ரூ.33 லட்சம் மதிப்பில் நீர்த்தேக்க தொட்டியும், ரூ.46 லட்சத்தில் புதிய கழிப்பறை கட்டடமும், பொதுப்பணித்துறை சார்பில், நொய்யல் ஆற்றில் கான்கிரீட் தடுப்புச்சுவரும், பேரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், தனியார் அறக்கட்டளை நிர்வாகம் சார்பில், 50 தர்ப்பணம் மண்டபங்கள், காத்திருப்போர் அறை, கல் தளம், பசு மடம், பார்க்கிங், கழிப்பறை, நுழைவாயில், காக்கைக்கு படையல் வைக்கும் இடம் என, மொத்தம், 12 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








      Dinamalar
      Follow us