sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

காதுகேளாதோர் பிரீமியர் லீக் போட்டி விரைவில் துவக்கம்

/

காதுகேளாதோர் பிரீமியர் லீக் போட்டி விரைவில் துவக்கம்

காதுகேளாதோர் பிரீமியர் லீக் போட்டி விரைவில் துவக்கம்

காதுகேளாதோர் பிரீமியர் லீக் போட்டி விரைவில் துவக்கம்


ADDED : ஜூலை 08, 2024 11:07 PM

Google News

ADDED : ஜூலை 08, 2024 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;தமிழ்நாடு காதுகேளாதோர் பிரீமியர் லீக் (டி.டி.பி.எல்.,) திட்டமிடல் கூட்டம், கே.கே.நாயுடு மேல்நிலைப்பள்ளியில் பத்மாவதி ஹாலில் நடந்தது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார், டெப் லீடர்ஸ் அறக்கட்டளையின் இயக்குனர் முரளி, புகழ்பெற்ற சமூக சேவகர் டாக்டர் டார்வின் மோசஸ் உட்பட, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதிலும் உள்ள, 30 முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் ஒன்றிணைக்கப்பட்டனர். அவர்களுடன், டி.டி.பி.எல்., சீசன் குறித்து விவாதிக்கப்பட்டு, வியூகம் வகுக்கப்பட்டது. சில்கால் அறக்கட்டளை, இந்த முயற்சிக்கு ஆதரவளித்துள்ளது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், 'தமிழ்நாடு காது கேளாதோர் பிரீமியர் லீக் போட்டி விரைவில் நடத்தப்பட உள்ளது.

டி.டி.பி.எல்., காது கேளாத விளையாட்டுவீரர்களுக்கு, ஒரு மாற்று தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது வீரர்களின் சிறப்பையும், சமூக உணர்வையும் வளர்க்கிறது. வரவிருக்கும் ஒரு உற்சாகமான நாளுக்காக, நாங்கள் காத்திருக்கிறோம்' என்றனர்.






      Dinamalar
      Follow us