sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பஸ்சை மறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு 

/

பஸ்சை மறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு 

பஸ்சை மறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு 

பஸ்சை மறித்த யானை; போக்குவரத்து பாதிப்பு 


ADDED : ஆக 06, 2024 11:55 PM

Google News

ADDED : ஆக 06, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் முகாமிட்டுள்ள யானை அரசு பஸ்சை வழிமறித்ததால், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி - வால்பாறை ரோட்டில் யானைகள் தனித்தனி கூட்டமாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. வால்பாறை - சாலக்குடி ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் இங்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், வால்பாறை - அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி ரோட்டில் கடந்த சில நாட்களாக 'கபாலி' என பெயரிடப்பட்ட யானை, அந்த வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களை வழிமறித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மதியம், 12:00 மணிக்கு வால்பாறை - அதிரப்பள்ளி ரோட்டில் உலா வந்த 'கபாலி'யானை, மளுக்கப்பாறை நோக்கி சென்ற கேரள அரசு பஸ்சை வழிமறித்தது. இதனால், சுற்றுலா வாகனங்களும் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதனால், நேற்று வால்பாறை - சாலக்குடி ரோட்டில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us