/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடர்ந்து தட்டியெடுக்கிறது மழை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவதி
/
தொடர்ந்து தட்டியெடுக்கிறது மழை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவதி
தொடர்ந்து தட்டியெடுக்கிறது மழை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவதி
தொடர்ந்து தட்டியெடுக்கிறது மழை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் அவதி
ADDED : மே 23, 2024 04:45 AM

கோவை: மழை தொடர்ந்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
நேற்று காலை முதல் கோவையில் மழை இல்லாத நிலையில் மாலை, 6:30 மணிக்கு வானம் கருமேகங்களால் சூழப்பட்டது. தொடர்ந்து கனமழை கொட்டியது.
மாநகரின் பெரும்பாலான பகுதிகளில், கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக வழக்கம் போல், ரோட்டில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காந்திபுரம் வெளியூர் பஸ் ஸ்டாண்டில், நான்காவது பிளாட்பாரம் அருகில் கழிவு நீரும், மழை நீரும் கலந்து குளம் போல் தேங்கி நின்றது. இதனால் பஸ் ஏற முடியாமல், பயணிகள் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து வரும் நாட்களிலும், கனமழை இருக்கும் என்பதால், மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

