/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உண்டியலில் திருட்டு: போலீசார் விசாரணை
/
உண்டியலில் திருட்டு: போலீசார் விசாரணை
ADDED : மார் 06, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வால்பாறை:
வால்பாறையில், சர்ச் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபரை போலீசார் தேடுகின்றனர். வால்பாறை அடுத்துள்ளது ரொட்டிக்கடை. இங்குள்ள புனித வனத்துசின்னப்பர் ஆலயத்தின் முகப்புவாயிலில் இரண்டு உண்டியல்கள் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த உண்டியல் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.