sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மானியத்தில் வீடு பெற இன்று சிறப்பு முகாம்

/

மானியத்தில் வீடு பெற இன்று சிறப்பு முகாம்

மானியத்தில் வீடு பெற இன்று சிறப்பு முகாம்

மானியத்தில் வீடு பெற இன்று சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 15, 2024 02:22 AM

Google News

ADDED : ஜூலை 15, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:அடுக்குமாடி குடியிருப்பில், மானிய விலையில், 400 சதுர அடி வீடு பெற விண்ணப்பிக்க இன்று அன்னுாரில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தில், அல்லப் பாளையம், முல்லை நகரில், நலிவுற்ற, வீடற்ற, ஏழை, எளிய மக்களுக்காக, அனைவருக்கும் வீடு திட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.

இதில் ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கையறை, சமையலறை, குளியலறை, கழிப்பறையுடன், மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்ட, 400 சதுரடி பரப்பளவுள்ள, குடியிருப்பு, 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இங்கு 348 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பம் வழங்கும் முகாம், பேரூராட்சி சார்பில், இன்று (15ம் தேதி) காலை 10:00 மணிக்கு, அன்னுார் யூ.ஜி. மஹாலில் நடைபெறுகிறது. பொதுமக்கள், ரேஷன் கார்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களது ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வருமானச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம்.

விண்ணப்பதாரருக்கு இந்தியாவில் எங்கும் சொந்த வீடோ, நிலமோ இருக்கக்கூடாது. எனவே, உரிய ஆவணங்களுடன், முகாமில், விண்ணப்பித்து பயன்பெறலாம்,' என பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், செயல் அலுவலர் (பொறுப்பு) பெலிக்ஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us