/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பால கட்டுமான பணி பீளமேட்டில் போக்குவரத்து மாற்றம்
/
மேம்பால கட்டுமான பணி பீளமேட்டில் போக்குவரத்து மாற்றம்
மேம்பால கட்டுமான பணி பீளமேட்டில் போக்குவரத்து மாற்றம்
மேம்பால கட்டுமான பணி பீளமேட்டில் போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 18, 2024 01:24 AM
கோவை;பீளமேட்டில் உயர்மட்ட மேம்பால துாண் கட்டுமான பணி நடைபெறுவதால், இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகர போலீசார் விடுத்துள்ள அறிக்கை:
கோவை மாநகர், அவிநாசி ரோடு, ஹோப்ஸ் பகுதி ரயில்வே மேம்பாலம் அருகில், இன்று முதல் உயர் மட்ட மேம்பால துாண் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் வாகன நெரிசலை குறைக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
காந்திபுரத்திலிருந்து லட்சுமி மில்ஸ், எஸ்.ஆன்.ஆர்., சந்திப்பு, பி.எஸ்.ஜி., கல்லுாரி வழியாக, அவிநாசி மார்க்கம் செல்லும் வாகனங்கள், பயனீர் மில் ரோடு, அவிநாசி ரோடு சந்திப்பில் இடது புறம் திரும்பி, காந்தி மாநகர் மேம்பாலம், காந்தி மாநகர் சந்திப்பு, தண்ணீர் பந்தல் ரோடு எஸ் வளைவு சென்று வலது புறம் திரும்பி, டைடல் பார்க் ரோடு மற்றும் கொடிசியா ரோடு வழியாக அவிநாசி சாலையை அடையலாம்.
ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, 100 அடிரோடு, சிவானந்தா காலனி பகுதிகளில் இருந்து, அவிநாசி சாலை வழியாக, பீளமேடு விமான நிலையம், திருப்பூர், ஈரோடு, சேலம், செல்லும் வாகன ஓட்டிகள், சத்தி சாலை, கணபதி, விளாங்குறிச்சி, காளப்பட்டி, நால்ரோடு வழியாக அவிநாசி சாலை சென்றடையலாம்.
உக்கடம், ரேஸ்கோர்ஸ் பகுதிகளிலிருந்து, திருப்பூர், ஈரோடு, சேலம் செல்லும் வாகனங்கள், சுங்கம், ராமநாதபுரம், சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார் வழியாக எல் அண்ட் டி புறவழிச்சாலை சென்று , குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றடையலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.