/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்
/
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்
ADDED : ஆக 01, 2024 01:22 AM
கோவை : மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய தாலுகாக்களை சுற்றியுள்ள சுற்றுலா பகுதிகளுக்கு, சுற்றுலா செல்வதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்.
கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:
மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய வால்பாறை, ஆனைமலை, மேட்டுப்பாளையம், பேரூர் மற்றும் மதுக்கரை ஆகிய தாலுகாக்களை சுற்றியுள்ள, சுற்றுலா பகுதிகளான சின்னக்கல்லாறு, ஆழியாறு, சோலையாறு, கூலாங்கல்லாறு, அப்பர்நீராறு, கீழ்நீராறு, காடாம்பாறை, கவியருவி, கோவை குற்றாலம், பில்லூர், மற்றும் கீழ் பவானி ஆகிய இடங்களில், தற்போது தொடர் கனமழை பெய்து வருகிறது.
சில நேரங்களில் நிலச்சரிவு, நீரில் மூழ்குதல் போன்ற எதிர்பாரா நிகழ்வுகளும் ஏற்படலாம். அவற்றில் யாரும் சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்க வேண்டும். பருவமழை காலங்களில், இப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, கலெக்டர் கிராந்திகுமார் கூறியுள்ளார்.