sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனையில் பாலித்தீன் பயன்பாடு

/

அரசு மருத்துவமனையில் பாலித்தீன் பயன்பாடு

அரசு மருத்துவமனையில் பாலித்தீன் பயன்பாடு

அரசு மருத்துவமனையில் பாலித்தீன் பயன்பாடு


ADDED : ஜூன் 23, 2024 11:13 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில், தினமும், அதிகப்படியான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

அவ்வாறு, மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு, உடன் தங்குபவர்கள் மற்றும் உறவினர்கள், உணவு மற்றும் பழங்களை, பிளாஸ்டிக் கவர்களில் வாங்கிச் செல்கின்றனர்.

உணவுகளை உண்ட பின், இலை மற்றும் தோல் ஆகியவற்றை, பிளாஸ்டிக் கவர்களில் வைத்து, மருத்துவமனைகளின் வளாகத்துக்கு உள்ளேயே விட்டுச்செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மருத்துவமனையில் துாய்மைப்பணியாளர்கள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், கழிவுகள் உடனுக்குடன் அகற்றப்படுவதும் கிடையாது.

தன்னார்வலர்கள் கூறுகையில், 'மருத்துவமனை நுழை வாயில்களில், பாதுகாப்பு பணியில் உள்ள ஊழியர்கள் வாயிலாக, பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்ய வேண்டும். அவ்வாறு, நடவடிக்கை இருந்தால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க முடியும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us