sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சொத்து வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

/

சொத்து வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சொத்து வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சொத்து வரி செலுத்தாதவர்கள் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


ADDED : மார் 12, 2025 11:17 PM

Google News

ADDED : மார் 12, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சியில், சொத்து வரி செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. தற்போது வரிகள் மற்றும் குடிநீர் கட்டணம் வசூல் செய்யும் பணிகள், தீவிரமாக நடைபெறுகின்றன. நகராட்சி சார்பில் சங்கர் நகரில் சிறப்பு முகாம் அமைத்து, வரிகள், குடிநீர் கட்டணம் வசூல், உரிம கட்டணம் புதுப்பித்தல் ஆகிய பணிகள், மூன்று நாட்களுக்கு நடைபெற உள்ளன.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா கூறியதாவது: நகராட்சியில் இதுவரை, 90 சதவீதம் வரிகள் வசூல் ஆகியுள்ளது. இன்னும், 63 லட்சம் ரூபாய் வரி பாக்கியுள்ளன.அதேபோன்று இதுவரை, 80 சதவீதம் குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளன. இன்னும், 56 லட்சத்து, 72 ஆயிரம் ரூபாய் பாக்கி உள்ளது. மேலும் நகராட்சி கடைகளின் வாடகை, 20 லட்சம் ரூபாய் பாக்கியுள்ளது. மேலும் வருகிற, 15, 16 மற்றும் 22, 23 ஆகிய தேதிகளில், நகராட்சி அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுவரை வரிகள், குடிநீர் கட்டணம் செலுத்தாதவர்களின் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கமிஷனர் கூறினார்.






      Dinamalar
      Follow us