sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தூய்மையே சேவை திட்டத்தில் பணி ஊராட்சி பகுதிகளில் தீவிரம்

/

தூய்மையே சேவை திட்டத்தில் பணி ஊராட்சி பகுதிகளில் தீவிரம்

தூய்மையே சேவை திட்டத்தில் பணி ஊராட்சி பகுதிகளில் தீவிரம்

தூய்மையே சேவை திட்டத்தில் பணி ஊராட்சி பகுதிகளில் தீவிரம்


ADDED : செப் 17, 2024 04:37 AM

Google News

ADDED : செப் 17, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், சுகாதாரம் தொடர்பான பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளிலும், இன்று 17ம் தேதி முதல் அக்., 2ம் தேதி வரை, 'தூய்மையே சேவை' திட்டத்தின் வாயிலாக, சுகாதாரம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில், ஊராட்சி பகுதிகளில் குப்பை அகற்றம் செய்தல், அரசு பள்ளி, ஊராட்சியின் நீரோடை பகுதி என முக்கிய இடங்களில் மரக்கன்று நடவு செய்தல், சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் சுத்தம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தூய்மையே சேவை திட்டத்தை பள்ளி மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில், பேச்சு, ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும், மாணவர்களை மரம் வளர்க்க ஊக்குவித்தல் மற்றும் மாணவர் பேரணி போன்றவைகள் நடத்தப்படுகிறது.

இறுதியில், ஊராட்சி பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என, அனைத்து ஊராட்சி அதிகாரிகளும், அக்., 2ம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டத்தில் உறுதிமொழி எடுக்கப்படும். இத்தகவலை, கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us