sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விற்பனைக்காக வைத்திருந்த 1,547 மதுபாட்டில்கள் பறிமுதல்

/

விற்பனைக்காக வைத்திருந்த 1,547 மதுபாட்டில்கள் பறிமுதல்

விற்பனைக்காக வைத்திருந்த 1,547 மதுபாட்டில்கள் பறிமுதல்

விற்பனைக்காக வைத்திருந்த 1,547 மதுபாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஏப் 11, 2025 10:15 PM

Google News

ADDED : ஏப் 11, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், சில்லிங் விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்த, 1,547 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தியையொட்டி,சில்லிங் விற்பனை நடைபெறுகிறதா என, ஏ.எஸ்.பி., சிருஷ்டிசிங் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.

அதில், பொள்ளாச்சி லிங்கையன் வீதியில் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து, 1,451 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரது வீட்டில் குடியிருந்த சிவகங்கையை சேர்ந்த அருண்,29 என்பவர், மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருப்பதாக மேற்கு போலீசார் தெரிவித்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

அதே போன்று, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட வஞ்சியாபுரம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட, லுாயிஸ் என்பவரிடம் இருந்து, 18 மதுபாட்டில்கள்; சிவபாலன் என்பவரிடம் இருந்து, 55 மதுபாட்டில்களையும்; ஓம்பிரகாஷ் தியேட்டர் அருகே விக்னேஷிடம் இருந்து, 23 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us