sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரேஷன் கடைகளுக்கு வந்தது 4ஜி பி.ஓ.எஸ்., கருவி!

/

ரேஷன் கடைகளுக்கு வந்தது 4ஜி பி.ஓ.எஸ்., கருவி!

ரேஷன் கடைகளுக்கு வந்தது 4ஜி பி.ஓ.எஸ்., கருவி!

ரேஷன் கடைகளுக்கு வந்தது 4ஜி பி.ஓ.எஸ்., கருவி!


ADDED : ஜன 15, 2024 01:18 AM

Google News

ADDED : ஜன 15, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:கோவையில் ரேஷன்கடைகளில் பி.ஓ.எஸ்., (பாய்ன்ட் ஆப். சேல்ஸ்) கருவி மூலம் ரேஷன் கார்டுதாரர்களின் கைரேகை பதிவு செய்யப்பட்ட பின், பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த கருவி 2ஜி நெட் ஒர்க்கில் செயல்படுவதால் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டு வேலை செய்வதில்லை. இதனால் பொருட்கள் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இந்த பழைய கருவியை மாற்றி, 4ஜி நெட் ஒர்க்கில் இயங்கும் புதிய கருவி வழங்க வேண்டும் என, ரேஷன்கடை ஊழியர்கள், அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இது குறித்து நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, பழைய மெஷின்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறியதாவது:

பழைய பி.ஓ.எஸ்., கருவியை மாற்றி, 4ஜி நெட் ஒர்க்கில் இயங்கும் புதிய பி.ஓ.எஸ்., கருவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பேரூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட ஐந்து பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு, ஒரு பகுதிக்கு 15 கருவிகள் வீதம், 75 பி.ஓ. எஸ்., புதிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் கைரேகை மட்டுமல்ல, கருவிழி பதிவும் செய்ய முடியும். கைரேகை பதிவாகாத கார்டுதாரர்களுக்கு, கருவிழி பதிவு மூலம் பொருட்கள் வழங்கலாம்.

விரைவில் கோவை மாவட்டத்தில் உள்ள, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இந்த புதிய பி.ஓ. எஸ்., வழங்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us