sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்

/

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்

கோவை கலெக்டர் ஆபீசுக்கு 5வது முறை வெடிகுண்டு மிரட்டல்


ADDED : செப் 05, 2025 10:37 PM

Google News

ADDED : செப் 05, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்துக்குள், வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, 26ம் தேதி, இ-மெயில் வாயிலாக மிரட்டல் வந்தது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தியபோது, புரளி என்பது தெரியவந்தது.

அதன்பின் தொடர்ச்சியாக, மூன்று நாட்கள் அதேபோல் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோவை மாநகர இணையவழி குற்றப்பிரிவு (சைபர் கிரைம்)போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

அரசு விடுமுறை தினமான நேற்றுகலெக்டர் ஆபீஸ் இ-மெயிலுக்கு, அதிகாலை 5.26 மணிக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது.

விடுமுறை என்பதால் தாமதமாக, மதியத்துக்கு பின் இ-மெயிலை சரிபார்த்தபோது குண்டு மிரட்டல் வந்தது தெரியவந்தது. மோப்ப நாய் மலர் மற்றும் வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் சோதனையிட்டனர்.

வெடிகுண்டு இல்லை. தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் மர்ம நபர்களை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us