sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா

/

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா

முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில் பாராட்டு விழா


ADDED : ஜன 24, 2025 10:52 PM

Google News

ADDED : ஜன 24, 2025 10:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; அத்திக்கடவு திட்டத்திற்கு நிதி ஒதுக்கிய முன்னாள் முதல்வர் பழனி சாமிக்கு கூட்டமைப்பு சார்பில் வரும் 9ம் தேதி பாராட்டு விழா நடக்கிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில், 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டம் 1,913 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 95 சதவீத குளங்களுக்கு தண்ணீர் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் திட்டத்திற்கு, அடிக்கல் நாட்டி, நிதி ஒதுக்கி, திட்டம் வர காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் பழனி சாமிக்கு, அத்திக்கடவு அவிநாசி கூட்டமைப்பு சார்பில், பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வருகிற 9ம் தேதி அன்னுார் அருகே கஞ்சப்பள்ளி பிரிவில் பாராட்டு விழா நடைபெறுகிறது.

இதுகுறித்து அத்திக்கடவு கூட்டமைப்பு நிர்வாகிகள் நடராஜன், கணேசன் ஆகியோர் கூறியதாவது :

60 ஆண்டு காலமாக நடைபயணம், காலவரையற்ற உண்ணாவிரதம், கடையடைப்பு, என பல்வேறு போராட்டங்கள் இந்தத் திட்டத்திற்காக நடத்தினோம். முன்னாள் முதல்வர் பழனிசாமி இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி திட்டம் வர முக்கிய காரணமாக இருந்தார்.

எனவே, விவசாயிகள் மற்றும் அத்திக்கடவு -அவிநாசி கூட்டமைப்பு சார்பில், திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், அத்திக்கடவு ஆர்வலர்கள் பங்கேற்கும் பாராட்டு விழா வருகிற 9ம் தேதி மதியம் 3:00 மணிக்கு அம்பலவாணன் நினைவு திடலில் நடைபெறுகிறது. இதில் அத்திக்கடவு திட்டத்திற்காக போராடிய தன்னார்வலர்கள், விவசாயிகள் 10 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இதுகுறித்து அடுத்த கட்ட ஆலோசனை கூட்டம் வருகிற 26ம் தேதி மதியம் 3:00 மணிக்கு, அன்னுார் சத்தி சாலையில் உள்ள கொங்கு மன்றத்தில் நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us