/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுதுளி சார்பில் மரக்கன்று நடும் பிரமாண்ட திட்டம்
/
சிறுதுளி சார்பில் மரக்கன்று நடும் பிரமாண்ட திட்டம்
சிறுதுளி சார்பில் மரக்கன்று நடும் பிரமாண்ட திட்டம்
சிறுதுளி சார்பில் மரக்கன்று நடும் பிரமாண்ட திட்டம்
ADDED : டிச 13, 2025 06:35 AM

கோவை: சிறுதுளி அமைப்பு மற்றும் கோவை ரவுண்ட் டேபிள் 9, கோவை லேடீஸ் சர்க்கிள் 1, கோவை சிட்டி ரவுண்ட் டேபிள் 31 மற்றும் கோவை சிட்டி லேடீஸ் சர்க்கிள் 16 ஆகியவை சார்பில், கோவைப்புதுார் போலீஸ் ஆட்சேர்ப்பு கிளப்பில், மாபெரும் மரக்கன்று நடும் திட்டம் துவங்கப்பட்டது.
பாக்யம் இண்டஸ்ட் ரீஸ் மற்றும் ஸ்டால்வர்ட் பீப்பிள் சர்வீசஸ் நிறுவனங்கள் ஆதரவுடன் துவங்கப்பட்டுள்ள திட்டத்தில், ஆயிரம் மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குமரகுரு தொழில்நுட்பக்கல்லுாரி, ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலைக்கல்லுாரி மற்றும் ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரிகளைச் சேர்ந்த, 300 மாணவர்களின் பங்கேற்புடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
துவக்க விழாவில், கோவைப்புதுார், ஐ.வி.பீ.என்.பிரிவு கமாண்டன்ட் டி.எஸ்.பி., செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், அபெக்ஸ் உறுப்பினர்கள் சுஜனி பாலு மற்றும் கிருஷ்ணசாமி, பாக்யம் இண்டஸ்ட்ரீஸ் சார்பில் பிரவீன், லேடீஸ் சர்க்கிள் ஏரியா தலைவி மந்தாகினி மற்றும் ரவுண்ட் டேபிள் ஏரியா துணைத் தலைவர் ரோஹித் ஆகியோருடன், ரவுண்ட் டேபிள் மற்றும் லேடீஸ் சர்க்கிள் உறுப்பினர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

