sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் விழா

/

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் விழா

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் விழா

வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் விழா


ADDED : ஜூன் 23, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூன் 23, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா, அடுத்த மாதம் 22ம் தேதி, பூச்சாட்டுடன் துவங்குகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது, மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இக்கோவில் ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்டதாகும். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிக் குண்டம் விழா விமர்சையாக நடைபெறும். இவ்விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர்.

இந்த ஆண்டு இக்கோவிலில், 32ம் ஆண்டு ஆடி குண்டம் விழா, ஜூலை மாதம் 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது. 24ம் தேதி ஆடி அமாவாசை பூஜையும், 25ல் லட்சார்ச்சனையும், 26ல் கிராம சாந்தி பூஜையும் நடைபெற உள்ளது. 27ம் தேதி கொடியேற்றமும், சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடும் நடைபெறுகிறது. 28ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், அதைத்தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது.

30ம் தேதி மாவிளக்கு மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், 31ம் தேதி பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை ஆகியவை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், 4ம் தேதி 108 குத்துவிளக்கு பூஜையும், 5ம் தேதி மறு பூஜையும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, தக்கார் மேனகா ஆகியோர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us