sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆடி மாத பிரதோஷம்; கோவில்களில் வழிபாடு

/

ஆடி மாத பிரதோஷம்; கோவில்களில் வழிபாடு

ஆடி மாத பிரதோஷம்; கோவில்களில் வழிபாடு

ஆடி மாத பிரதோஷம்; கோவில்களில் வழிபாடு


ADDED : ஜூலை 22, 2025 10:04 PM

Google News

ADDED : ஜூலை 22, 2025 10:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

----- நிருபர் குழு -

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, ஆடி மாத பிரதோஷபூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.

அதன்பின், ரிஷப வாகனத்தில் சிவபெருமான், தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

வால்பாறை சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவில், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன் கோவில்களில் நேற்று மாலை, 6:00 மணிக்கு பிரதோஷ பூஜையில், சிவபெருமானுக்கு, 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

* உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், மலைமேல் பஞ்சலிங்கம் சுவாமி அமைந்துள்ளது. பிரதோஷத்தன்று மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், நேற்று ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, மலைமேலுள்ள பஞ்சலிங்க சுவாமிகளுக்கு, பல்வேறு திரவியங்களில் அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

அதே போல், உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள சிவாலயங்களில், பிரதோஷத்தை முன்னிட்டு, சிவபெருமான் மற்றும் நந்திக்கு மகா அபிேஷகம் நடந்தது.






      Dinamalar
      Follow us