/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வனபத்ர காளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா ஆலோசனை
/
வனபத்ர காளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா ஆலோசனை
வனபத்ர காளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா ஆலோசனை
வனபத்ர காளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் விழா ஆலோசனை
ADDED : ஜூலை 12, 2025 01:16 AM
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், 32ம் ஆண்டு ஆடிக் குண்டம் விழா, வரும் 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்குகிறது.
27ம் தேதி கொடியேற்றமும், சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
28ம் தேதி பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், அதைத்தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடைபெற உள்ளது.
குண்டம் விழா குறித்து அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம், கோவை வடக்கு ஆர்.டி.ஓ., கோவிந்தன் தலைமையில் நடந்தது.
கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி வரவேற்றார். எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசுகையில், ''குண்டம் மிதிக்கும் பக்தர்களுக்கு காலில் தீக்காயம் ஏற்படாமல் இருக்க, நன்கு விளைந்த ஊஞ்சவிறகை மட்டுமே, குண்டத்திற்கு பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
அரசு போக்குவரத்து அதிகாரி பேசுகையில், 'மேட்டுப்பாளையம், திருப்பூர், சக்தி, கோவை, குன்னுார் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் கோவிலுக்கு இயக்கப்பட உள்ளன,'' என்றார்.
டி.எஸ்.பி., அதியமான் பேசுவையில், ''கோவில் வளாகத்தில் போலீஸ் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும். மேலும் அதிகமான கண்காணிப்பு கேமராக்களை அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்படும்,' என்றார்.
கூட்டத்தில் மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னக்காமணன், தாசில்தார் ராமராஜ் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.