sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மானிய விலையில் சோளம் வேளாண் துறை அறிவிப்பு

/

மானிய விலையில் சோளம் வேளாண் துறை அறிவிப்பு

மானிய விலையில் சோளம் வேளாண் துறை அறிவிப்பு

மானிய விலையில் சோளம் வேளாண் துறை அறிவிப்பு


ADDED : ஜூன் 20, 2025 11:45 PM

Google News

ADDED : ஜூன் 20, 2025 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டார விவசாயிகளுக்கு, மானிய விலையில் சோளம் வழங்க தயார் நிலையில் உள்ளது, என, வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

கிணத்துக்கடவு வட்டாரத்தில், ஆண்டு தோறும், 3 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. தேசிய உணவு ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், மானிய விலையில் விவசாயிகளுக்கு சோளம் வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோவுக்கு 30 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

தற்போது, ஆனி மற்றும் ஆடி பட்டம் துவங்கியுள்ளது. தற்போது 'கே12' ரக சோளம் விதை (உயர் விளைச்சல் ரகம்) 1,500 கிலோ இருப்பு உள்ளது. இது பாசன நிலம் மற்றும் மானாவாரியில் சாகுபடி செய்யலாம்.

இது, 5 முதல் 6 அடி வரை வளரக்கூடியது. இதை தானியமாகவும், தீவனமாகவும் பயன்படுத்தலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 30 கிலோ வழங்கப்படும். இதே போன்று நுண்ணூட்டச்சத்து, 1,500 கிலோ இருப்பு உள்ளது. இது, 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண்துறை உதவி இயக்குனர் தேவி மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us