/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவி தொகை
/
ஆதரவற்ற மாணவர்களுக்கு உதவி தொகை
ADDED : மார் 19, 2024 11:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் அருகே நடந்த மகளிர் தின விழாவையொட்டி, ஆதரவற்ற மாணவ, மாணவியர், 15 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட்டது.
கூடலூர் நகராட்சி திருமலைநாயக்கன்பாளையம் ஆரம்ப பள்ளியில் மகளிர் தினத்தையொட்டி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் அரிட்டா புளோரி, சமூக ஆர்வலர் பேபி முருகேசன், வானவில் மன்ற கருத்தாளர் கருப்புசாமி ஆகியோர் இணைந்து ஆதரவற்ற மாணவர்கள், 15 பேருக்கு உதவி தொகை வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மணிமேகலை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

