sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

முழு கொள்ளளவை எட்டிய ஆழியாறு; 3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்

/

முழு கொள்ளளவை எட்டிய ஆழியாறு; 3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்

முழு கொள்ளளவை எட்டிய ஆழியாறு; 3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்

முழு கொள்ளளவை எட்டிய ஆழியாறு; 3 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம்


ADDED : ஜூலை 24, 2025 08:35 PM

Google News

ADDED : ஜூலை 24, 2025 08:35 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு, 618 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

பி.ஏ.பி., பாசனத்தில், முக்கிய அணையான ஆழியாறு அணை, 76 சதுர மைல்களை நீர்ப்பிடிப்பு பரப்பாக கொண்டுள்ளது. இந்த நீர்த்தேக்கத்தின் முழு கொள்ளளவு, 3,864 மில்லியன் கனஅடிகளாகும். மொத்தம், 120 அடி உயரமுள்ள அணையில், சேகரிக்கப்படும் தண்ணீர், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரங்களுக்கும், ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

நடப்பாண்டு பருவமழை கைகொடுத்ததால் அணை நீர்மட்டம் மெல்ல உயர்ந்தது.கடந்த, ஒரு மாதத்துக்கு மேலாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம், 18ம் தேதி 95 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.

கடந்த மாதம், 21ம் தேதி தொடர் நீர்வரத்தால் அணை நீர்மட்டம் 100 அடியானது. கடந்த மாதம், 28ம் தேதி ஆழியாறு அணை நீர்மட்டம் 110.70 அடியாக உயர்ந்ததும், முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த, 3ம் தேதி இரவு, 11:00 மணிக்கு 120 அடியில், 115.20 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததும், இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.மேலும், பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த, 8ம் தேதி, 118 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது.

அணை முழு கொள்ளளவை எட்டும் சூழலில், உபரிநீர் வீணாகாமல் தடுக்கும் வகையில், விவசாய பயன்பாட்டுக்கு கால்வாய் மற்றும் ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், நேற்று மதியம், 2:00 மணிக்கு, 118.80 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததும், மூன்று மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 1,077 கனஅடி நீர் வரத்தாக இருந்தது. 1,329 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில்,'ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் உபரிநீர் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது.

மொத்தமுள்ள, 11 மதகுகளில், நேற்று மூன்று மதகுகள் வழியாக வினாடிக்கு, 618 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றில் வினாடிக்கு, 650 கனஅடி நீரும்; கால்வாய் வழியாக வினாடிக்கு, 61 கனஅடி நீர் என மொத்தம், வினாடிக்கு, 1,329 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us