sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சியை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை

/

மாநகராட்சியை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை

மாநகராட்சியை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை

மாநகராட்சியை அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் முற்றுகை


ADDED : ஜன 28, 2025 11:50 PM

Google News

ADDED : ஜன 28, 2025 11:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தின வாடகையை குறைக்கக்கோரி, கோவை மாநகராட்சி அலுவலகத்தை, அண்ணா மார்க்கெட் வியாபாரிகள் நேற்று முற்றுகையிட்டனர்.

கோவை - மேட்டுப்பாளையம் ரோடு, 69வது வார்டில் அண்ணா மார்க்கெட் செயல்படுகிறது; 476 கடைகள் நடத்தப்படுகின்றன. இவ்வளாகத்தை புதுப்பித்து, மேடைக்கடைகள் அமைக்கும் பணி, மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது.

இதுவரை, 81 கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. புதிதாக கடைகள் கட்டுவதால், பொது ஏல முறையில் டெண்டர் கோரி, ஒதுக்கீடு செய்ய மாநகராட்சி திட்டமிட்டது. 37 ஆண்டுகளாக கடை நடத்தி வருவதால், பழைய வியாபாரிகளுக்கே ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

டெண்டர் முறை கையாண்டால், புதியவர்கள் வருவதற்கும், பழைய வியாபாரிகளுக்கு கடை கிடைக்காத சூழலும் உருவாகும்; அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது. இக்கோரிக்கையை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

இப்போது தினசரி வாடகையாக, நாளொன்றுக்கு, 300 ரூபாய், குப்பை வரியாக, 25 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, சிறு குறு வியாபாரிகளை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

வாடகையை குறைக்கக்கோரி, வியாபாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என, 900 பேர், டவுன்ஹாலில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கானோர் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. குறைகேட்பு கூட்டத்தில் இருந்த மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோரிடம், கோவை அண்ணா மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை பரிசீலிப்பதாக, கமிஷனர் தெரிவித்தார்.

வாழ்வாதாரம் பாதுகாக்கணும்

வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது:அண்ணா மார்க்கெட்டில் தற்போது, 6க்கு 6 சைஸ் தரைக்கடை ஒன்றுக்கு ரூ.20, 5க்கு 6 சைஸ் மேடைக்கடைக்கு ரூ.50 வீதம் தின வாடகை செலுத்துகிறோம். இதுதவிர, மூட்டைக்கு, 3 ரூபாய் வீதம் சுங்கம் கொடுக்கிறோம்.2024 டிச., மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில், மேடை கடை தின வாடகையாக ரூ.300, குப்பை வரி ரூ.25 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது நிர்ணயம் செய்துள்ள வாடகையால் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும்; பொருட்களின் விலை உயரும்.எனவே, மூட்டை சுங்கம், குப்பை வரி சேர்த்து தின வாடகையாக ரூ.100 நிர்ணயிக்க வேண்டுமென கோரியுள்ளோம். நியாயமான வாடகை நிர்ணயித்து, 1,000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு, வியாபாரிகள் கூறினர்.








      Dinamalar
      Follow us