ADDED : மார் 01, 2024 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்;சிறுமுகையில் அண்ணன், அண்ணியை தாக்கிய தம்பி கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் மகேந்திரன், 34. கூலி தொழிலாளி. இவரது மனைவி அம்சவேணி, 30. சிறுமுகையில் மகேந்திரனின் அம்மா வீடு உள்ளது.
அம்மாவை பார்பதற்காக மகேந்திரன், தனது மனைவியுடன் சிறுமுகை வந்தார். அம்மா வீட்டில் தங்கிருந்த மகேந்திரனிடம், அவரது தம்பி சிதம்பரம் எப்போது இங்கிருந்து செல்வீர்கள் என கேட்டுள்ளார்.
இதனால் கோபம் கொண்ட மகேந்திரன், தான் இங்கேயே தான் இருக்க போவதாக கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிதம்பரம், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து மகேந்திரனை தாக்கினார். தடுக்க சென்ற அவரது மனைவி அம்சவேணியையும் தாக்கினார். புகாரின்பேரில், சிறுமுகை போலீசார் வழக்கு பதிந்து, சிதம்பரத்தை கைது செய்தனர்.

