/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அஸ்மிதா' தடகளப்போட்டி :மாணவியர் அசத்தல்
/
'அஸ்மிதா' தடகளப்போட்டி :மாணவியர் அசத்தல்
ADDED : நவ 28, 2025 05:10 AM

கோவை: இந்திய தடகள சம்ளேனம், கேலோ இந்தியா, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை இணைந்து, அஸ்மிதா (வீரமங்கை) என்ற பெயரில், நாடு முழுவதும், 300 மாவட்டங்களில் தடகளப் போட்டிகளை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தியா முழுவதும் நடத்தப்படும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் 50 ஆயிரம் மாணவியரை தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து, சிறந்த விளையாட்டு வீரரை உருவாக்குவது இதன் நோக்கம்.
தமிழகம் முழுவதும், தமிழ்நாடு தடகள சங்கம், இப்போட்டிகளை நடத்தி வரும் நிலையில், கோவையில், கோவை மாவட்ட தடகள சங்கம் ஒருங்கிணைத்து, இப்போட்டிகளை, நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடத்தியது.
தெற்காசிய அளவில், சமீபத்தில் புவனேஸ்வரில் நடத்த விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஒலம்பஸ் ஸ்டெபி, போட்டிகளை துவக்கி வைத்தார்.
14 வயதுக்கு உட்பட்ட ஈட்டி எறிதல் போட்டியில், ஆஷிகா ஸ்ரீ, லியா, ஆர்யா சுஷாந்த், டிரையத்லான் 'ஏ' பிரிவில் ஜோதிகா, ஆதிரா, அனுஸ்ரீ, 'பி' பிரிவில் அக் ஷயா ஸ்ரீ, ரியா, அஸ்விகா ஆகியோர் வெற்றி பெற்றனர். 16 வயதுக்கு உட்பட்ட உயரம் தாண்டுதலில் அக் ஷயா, பரணி, அதன்யா, குண்டு எறிதலில் திவ்ய தர்ஷினி, ஹேமலி, தர்ஷினி, 600 மீ., ஓட்டத்தில் மஹதி, சுசித்ரா, ஷிபானி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கோவை மாவட்ட தடகள கிளப் தலைவர் சுமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

