/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பசுமை தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு
/
பசுமை தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : அக் 12, 2025 10:29 PM
பொள்ளாச்சி;தீபாவளியை பட்டாசு இன்றி, பசுமையை வலியுறுத்தும் வகையில் கொண்டாட அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவுறுத்தப்படுகிறது.
தீபாவளி தினத்தன்று, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். அதேவேளையில், பட்டாசு வெடிப்பதால் நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன.
பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசு காரணமாக, சிறுகுழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் என பலரும் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கின்றனர்.
இந்நிலையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில், பசுமை தீபாவளி கொண்டாட மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
தீபாவளி பண்டிகையன்று, ஒலி மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மை கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க அறிவுரை வழங்கப்படும். குறிப்பாக, பட்டாசு வாங்குவதை தவிர்த்து, ஆடை, காலணி வாங்கிப் பயன்படுத்தவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினர்.