ADDED : ஜன 31, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் ரிசர்வ் பாங்க் சார்பில், கிராமப்புற மக்களுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கோவை மாவட்ட வங்கி நிதி சார் கல்வி ஆலோசகர் ரவி வரவேற்றார். ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அன்பரசன் பேசுகையில், மொபைல் செயலி வாயிலாக கடன் பெறுவதால் ஏற்படும் பின் விளைவுகளை எடுத்துக் கூறி, அதை தவிர்க்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.
வங்கி செயல்பாடுகளில் குறை கண்டால், கட்டணமில்லா தொலைபேசி, 14448 என்ற எண்ணில் புகார் செய்யலாம் என்றார்.
மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சித்தேந்திரன், கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஏற்பாடுகளை தேசிய மனித மேம்பாட்டு மைய இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.

