/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
/
வாழைத்தார் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : பிப் 19, 2025 09:29 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், விவசாய நிலத்தில் தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும், விவசாயிகள் பல்வேறு ரக வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்து, மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் வாழைத்தார்கள் ஏல முறையில் விற்பனை செய்வதால், போட்டி ஏற்பட்டு, அதிக விலை கிடைக்கிறது.
தினசரி மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை கிலோ -- 60, நேந்திரன் --- 55, ரஸ்தாலி --- 40, பூவன் --- 45, கதளி --- 40, சாம்பிராணி வகை --- 35 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது, செவ்வாழை, நேந்திரன் மற்றும் பூவன் வாழைத்தார்கள் கிலோவுக்கு, 10 ரூபாய், கதளி 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. ரஸ்தாலி மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் விலை கிலோவுக்கு - 5 ரூபாய் குறைந்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது, 'தினசரி மார்க்கெட்டில், வாழைத்தார்கள் விலை அதிகரித்துள்ளது. ஒரு சில ரகங்களுக்கு அதிக விலை கிடைத்தது. விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,' என்றனர்.