sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாழைத்தார் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

/

வாழைத்தார் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

வாழைத்தார் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

வாழைத்தார் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி


ADDED : பிப் 19, 2025 09:29 PM

Google News

ADDED : பிப் 19, 2025 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் விலை உயர்ந்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், விவசாய நிலத்தில் தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும், விவசாயிகள் பல்வேறு ரக வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்து, மார்க்கெட்டிற்கு கொண்டு வரும் வாழைத்தார்கள் ஏல முறையில் விற்பனை செய்வதால், போட்டி ஏற்பட்டு, அதிக விலை கிடைக்கிறது.

தினசரி மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை கிலோ -- 60, நேந்திரன் --- 55, ரஸ்தாலி --- 40, பூவன் --- 45, கதளி --- 40, சாம்பிராணி வகை --- 35 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், தற்போது, செவ்வாழை, நேந்திரன் மற்றும் பூவன் வாழைத்தார்கள் கிலோவுக்கு, 10 ரூபாய், கதளி 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. ரஸ்தாலி மற்றும் சாம்பிராணி வகை வாழைத்தார் விலை கிலோவுக்கு - 5 ரூபாய் குறைந்துள்ளது.

வியாபாரிகள் கூறியதாவது, 'தினசரி மார்க்கெட்டில், வாழைத்தார்கள் விலை அதிகரித்துள்ளது. ஒரு சில ரகங்களுக்கு அதிக விலை கிடைத்தது. விலை உயர்வால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,' என்றனர்.






      Dinamalar
      Follow us