ADDED : டிச 26, 2025 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோமனூர்: கோவை வடக்கு மாவட்ட பா.ஜ. விவசாய அணி ஆலோசனை கூட்டம் சோமனூரில் நடந்தது.
தலைவர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். மாநில தலைவர் நாகராஜ் பேசியதாவது:
ஈரோட்டில் வரும் 5ம் தேதி நடக்கும் விவசாய அணி மாநாடு, தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும். மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, பல திட்டங்களை பிரதமர் மோடி அமல்படுத்தி வருகிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், விவசாயிகள் திரளாக பங்கேற்க வேண்டும், என் றார்.

