sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.3.4 கோடியில் பாலம் பணி; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

/

ரூ.3.4 கோடியில் பாலம் பணி; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

ரூ.3.4 கோடியில் பாலம் பணி; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

ரூ.3.4 கோடியில் பாலம் பணி; கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு


ADDED : மே 05, 2025 10:47 PM

Google News

ADDED : மே 05, 2025 10:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே பாலம் பணியை, சேலம் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் உள் தணிக்கை செய்தார்.

பொள்ளாச்சி கோட்டத்துக்கு உட்பட்ட, 2024-25ம் ஆண்டுக்கான உள் தணிக்கையை, சேலம் கிராம சாலைகள் வட்ட கண்காணிப்பு பொறியாளர் சரவணன் மேற்கொண்டார். அதில், பொள்ளாச்சி அருகே, சேர்வகாரன்பாளையத்தில், 3.40 கோடி ரூபாய் செலவில், கட்டப்படும் பாலம் பணிகளை தணிக்கை செய்தார். பணிகள் தரம் குறித்து ஆய்வு செய்ததுடன், அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

அதில், நெடுஞ்சாலைத்துறை பொள்ளாச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் சரவணசெல்வம், ஓமலுார் கிராம சாலைகள் உதவி கோட்ட பொறியாளர் பிரபாகரன், சேலம் கோட்ட கிராம சாலைகள் உதவி பொறியாளர்கள் பார்த்திபன், அரவிந்த் மற்றும் பொள்ளாச்சி கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'அரசு பொறுப்பேற்றது முதல் நெடுஞ்சாலைத்துறை பணிகள் உள் தணிக்கை செய்யப்படுகிறது. அதில், ஏப்., மாதம் முதல் மார்ச் வரையிலான மேற்கொள்ளப்படும் பணிகள் மே மாதத்தில் ஆய்வு செய்யப்படும்.

அதன்படி, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெறும் பணிகளை, உள் தணிக்கை செய்ய, சேலம் கிராம சாலைகள் வட்ட கண்காணிப்பு பொறியாளருக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது. அவர், நேற்று பணிகளை ஆய்வு செய்தார்,' என்றனர்.






      Dinamalar
      Follow us