/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
பி.எஸ்.என்.எல்., ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2026 05:02 AM
கோவை: பி.எஸ்.என்.எல்., ஒப்பந்த ஊழியர்கள், கோவையில் உள்ள முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் குடியரசு தலைமை வகித்தார்.
ஒப்பந்த ஊழியர்களுக் கான நிதி ஒதுக்கீட்டை குறைக்க கூடாது, பி.எஸ்.என்.எல். சேவையை சீரழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், கூடுதல் ஒப்பந்த ஊழியர்களை நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.
ஒப்பந்த ஊழியர் சங் கத்தின் மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப், கோரிக்கைகளை விளக்கி பேசினார். பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்க மாநில செயலாளர் மகேஸ்வரன், பி.எஸ்.என்.எல்., ஊழியர் சங்கத்தின் மாவட்ட அமைப்பு செயலாளர் சரவணன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட் டத்தில் பங்கேற்றனர்.

