/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டடம் இடிப்பு அரசு நிலம் மீட்பு
/
கட்டடம் இடிப்பு அரசு நிலம் மீட்பு
ADDED : ஜன 23, 2026 05:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாநகராட்சி 20வது வார்டில் உள்ள கே.ஆர்.ஜி. நகரில் 7 சென்ட் அரசு நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து, வீடு கட்டியிருந்தார். அதை காலி செய்ய மூன்று மாதங்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நேற்று, நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், உதவி அலுவலர் சத்யா, உதவி பொறியாளர் இளங்கோவன் ஆகியோர் குழுவுடன் சென்று கட்டடத்தை இடித்து நிலத்தை மீட்டனர். அதன் மதிப்பு 2 கோடி ரூபாய் என தெரிவித்தனர்.

