/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்; 102 பேர் பங்கேற்பு
/
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்; 102 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்; 102 பேர் பங்கேற்பு
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்; 102 பேர் பங்கேற்பு
ADDED : நவ 28, 2025 04:59 AM

கிணத்துக்கடவு: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
இதில், கிணத்துக்கடவு வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுனர் ஹெரன், வட்டார கல்வி அலுவலர்கள் எடிசன் பெர்னாட் மற்றும் பூம்பாவை, பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் பலர் பங்கேற்றனர்.
முகாமில், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவர் சான்றிதழ் வழங்குதல், இலவச ரயில் மற்றும் பஸ் பயண சலுகைகள், உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைக்கான பதிவு உள்ளிட்டவைகள் செய்து தரப்பட்டது.
மேலும், குழந்தைகள் நலம், மன நலம், காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
முகாமில், 102 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 4 பேருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் சார்பில் மருத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
மூவருக்கு யு.டி.ஐ.டி., அடையாள அட்டையும், ஆறு மாணவர்களுக்கு அட்டை புதுப்பித்தல் மற்றும் நான்கு பேருக்கு புதிதாக அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டது.

