sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்; 102 பேர் பங்கேற்பு

/

 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்; 102 பேர் பங்கேற்பு

 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்; 102 பேர் பங்கேற்பு

 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு முகாம்; 102 பேர் பங்கேற்பு


ADDED : நவ 28, 2025 04:59 AM

Google News

ADDED : நவ 28, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து நடத்திய, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.

இதில், கிணத்துக்கடவு வட்டார வளமைய பொறுப்பு ஆசிரியர் பயிற்றுனர் ஹெரன், வட்டார கல்வி அலுவலர்கள் எடிசன் பெர்னாட் மற்றும் பூம்பாவை, பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் பலர் பங்கேற்றனர்.

முகாமில், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல், மருத்துவர் சான்றிதழ் வழங்குதல், இலவச ரயில் மற்றும் பஸ் பயண சலுகைகள், உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைக்கான பதிவு உள்ளிட்டவைகள் செய்து தரப்பட்டது.

மேலும், குழந்தைகள் நலம், மன நலம், காது, மூக்கு, தொண்டை, கண் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

முகாமில், 102 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 4 பேருக்கு மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் சார்பில் மருத்துவ சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.

மூவருக்கு யு.டி.ஐ.டி., அடையாள அட்டையும், ஆறு மாணவர்களுக்கு அட்டை புதுப்பித்தல் மற்றும் நான்கு பேருக்கு புதிதாக அடையாள அட்டை பதிவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us